Posts

Showing posts with the label buddha

ஒரு கப்பல் புயலில் மாட்டிக் கொண்டபோது

     ஒரு கப்பல் புயலில் மாட்டிக் கொண்டபோது,அதில் பயணித்த அனைவரும் இறைவனை வழிபட தொடங்கினர்.ஒரு புத்த துறவி மாத்திரம் ஏதும் செய்யாது இருந்தார்.அவரை அனைவரும் பைத்தியம் என்று கேலி பேசினர்.அந்த துறவி சொன்னார்,''எனக்குக் கடவுளிடம் எந்த வியாபாரமும் இல்லை.நம்மைக் காப்பாற் வேண்டுமா,மூழ்கடிக் க வேண்டுமா என்பது இறைவன் கவலைப்பட வேண்டிய ஒன்று.அது என்னுடைய கவலை இல்லை.நான் பிறப்பதற்கு அவரிடம் கேட்கவில்லை.திடீரென இந்த பூமிக்கு  நான் வந்தேன்.ஆகவே,மரணத்தை  பற்றியும் நான் கேட்க முடியாது.எப்போது பிறப்பு என் கையில் இல்லையோ,மரணத்தைப்பற்றி மட்டும் எப்படி என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும்?